views

Friday, 29 November 2019

Important Days
Tamil Nadu
National
International
Science & Tech
Economy
First in India & World
Appointments
Resignations
Awards
Sports




All India Civil Services Jobs List

  1. Indian Administrative Service or IAS
  2. Indian Foreign Service or IFS
  3. Indian Police Service or IPS

List of Group A Services by UPSC

  1. Indian P & T Accounts & Finance Service
  2. Indian Audit and Accounts Service
  3. Indian Revenue Service (Customs and Central Excise)
  4. Indian Defence Accounts Service
  5. Indian Revenue Service (I.T.) or IRS
  6. Indian Ordnance Factories Service (Assistant Works Manager, Administration)
  7. Indian Postal Service
  8. Indian Civil Accounts Service
  9. Indian Railway Traffic Service
  10. Indian Railway Accounts Service
  11. Indian Railway Personnel Service
  12. Indian Railway Protection Force (Assistant Security Commissioner)
  13. Indian Defence Estates Service
  14. Indian Information Service (Junior Grade)
  15. Indian Trade Service, Group 'A' (Gr. III)
  16. Indian Corporate Law Service

List of Group - B Services

  1. Armed Forces Headquarters Civil Service (Section Officer's Grade)
  2. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service
  3. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service
  4. Pondicherry Civil Service
  5. Pondicherry Police Service
Indian Forest Service - A combined Preliminary examination is held for Indian Forest Service and Indian Civil Services. Read More

Other UPSC services exams held for Various Jobs & Posts

The UPSC also holds various exams for other services some of which are
  1. Engineering Services Examination
  2. Geologists Examination
  3. Special Class Railway Apprentices Exam
  4. National Defence & Naval Academy
  5. Combined Defence Services Examination
  6. Combined Medical Services Examination
  7. Indian Economic / Statistical Service
  8. S.O./Stenographer Limited Departmental Competitive Exam
  9. Central Police Forces (Assist Commandants)

Institute of Banking Personnel Selection (IBPS)
  • IBPS PO – Probationary Officer
  • IBPS Clerk – Clerical Officer
  • IBPS SO – Specialist Officer
  • IBPS Regional Rural Bank (IBPS RRB) Officer, Assistant

State Bank of India
  • SBI PO – Probationary Officer
  • SBI SO – Specialist Officer
  • SBI Clerk – Clerical Officer

Reserve Bank of India & NABARD Exams
  • RBI Grade B Officer
  • RBI Assistant
  • NABARD Assistant Manager
  • NABARD Assistant

Insurance Exams
  • LIC – Assistant Administrative Officer
  • LIC – Administrative Officer
  • LIC – Assistant Development Officer
  • LIC – Development Officer
  • UIIC – United India Insurance Corp Ltd
  • GIC – General India Corporation
  • NIACL – New India Assurance Corp Ltd
  • NICL – National Insurance Corp Ltd
  • OICL – Oriental Insurance Corp Ltd

Other Exams
  • Central Warehouse Corporation Ltd.
  • Manipal Bank Exams
  • All Private Bank Exams – KVB, LVB, ICICI, TMB, SOUTH INDIAN BANK, REPCO BANK and etc




TNPSC Exams:

Tamilnadu Uniform Services Recruitment Board (TNUSRB)
  • TNUSRB SI – SUB Inspector
  • TNUSRB PC – Police Constable




Staff Selection Commission Exams:
  • CHSL – Combined Higher Secondary Level
  • CGL – Combined Graduate Level
  • MTS – Multi-purpose staff
  • SSC Stenographer
  • CPO – Central Police Officer

Railway Exams:
  • RRB NTPC
  • RRB Ticket Collector

Other Central Govt Exams:
  • FCI – Food Corporation India
  • ESIC – Employees State Insurance Corporation
  • HVF – Heavy Vehicle Factory
  • OCF – Ordinance Clothing Factory
  • CDS – Combined Defence Service
  • NDA – National Defence Academy
Staff Selection Commission Exams:
  • CHSL – Combined Higher Secondary Level – Tier I Exam
  • CGL – Combined Graduate Level – Tier I Exam
  • MTS – Multi-purpose staff – Tier I Exam
  • SSC Stenographer – Tier I Exam

Railway Exams:
  • RRB NTPC
  • RRB Ticket Collector




Thursday, 31 October 2019

அளவீடுகள்
1.1 நீளம்
     பன்னாட்டு அலகு முறை
SI  அலகுகளின் பன்மடங்கு துணைப்பன்மடங்கு
அளவீடுகளை  துல்லியமாக அளவிடல்
அளவுகோலை பயன்படுத்தும் பொது ஏற்படும் தவறுகள்
வளைகோட்டின் நீளத்தை அளவிடும் முறைகள்
1.2  பருமன் திடப்பொருள் பருமன் 

Wednesday, 28 August 2019

ராமபிரான் அவதாரம் விசுவாமித்திரர் வருகையும்



ராமபிரான் அவதாரம் விசுவாமித்திரர் வருகையும்

       வசிஷ்டர் ஞானக்கண்ணால் கண்டபிறகு  தசரதனிடம் உனக்கு மக்கட்பேறு சீக்கிரம் கிடைக்கும்.அங்கநாட்டில் மனுக்குலத்தில் பிறந்த உத்தனப்பதனுடைய புதல்வன் ரோமப்பதான் ஆட்சியில் 12 ஆண்டுகளாக மழையில்லாமல் பஞ்சம் இருக்கவும் அங்கு கலைக்கோட்டு முனிவர் வருகை புரிந்ததால் மழை பெய்து வளம் செழித்தது. அவர் அளவற்ற தவம் செய்தவர்.

     ஆகவே அவரை அழைத்து வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் மக்கட்பேறு உண்டாகும் என்று கூறினார். அதனால் தசரத மன்னனும் தன்னுடைய பரிவாரங்கள் சூழ அந்நாட்டை அடைந்து அம்மன்னிடம் முனிவரை தம் நாட்டிற்கு  அனுப்பி வைக்குமாறு கேட்டார்.

     தசரதனின் வேண்டுகோளுக்கிணங்க கலைக்கோட்டு முனிவர் என்கிற ரிஷியசிருங்கர் தன் மனைவி காந்தையுடன் அயோத்தி மாநகருக்கு  வருகைபுரிய தசரதன் ஓராண்டு அவருக்கு பணிவிடைகள் செய்தார். அவரின் பணிவிடைகளால் மகிழ்ந்தவர் தசரதனின் துன்பத்தை போக்க புத்திர காமேஷ்டி யாகத்தை நகற்புறதே தவசீலர்கள் துணைபுரிய வேதமந்திரங்களை கூறி வேள்வியை செய்தார்.

     யாககுண்டத்தில் ஒரு தெய்வபூதம் தோன்றி யாகபாயசத்தை வழங்கி மறைந்தது. முனிவர் மன்னரிடம் கௌசலைக்கும் கைகேயிக்கும் கொடுக்குமாறு கூறினார். கொடுத்து பழகிய அவ்விருவரும் பாதியை சுமித்திரைக்கு கொடுத்தனர்.  மூவரும் கருவுற்றார்கள்.
     12மாதம் கருவுற்றிந்தார்கள். எவ்வாறெனில் ஆன்மாக்கள் விண்ணிலிருந்து மழையாக பூமியை வந்தடைந்து காய்கனி தானியங்களில் கலந்து தந்தையின் வயிற்றில் 2 மாதங்களும் பிறகு தாய் வயிற்றில் 10 மாதங்களும் கருவாக இருந்து தான் பிறக்கின்றன.

     சித்திரை மாதம் நவமி திதியில் புணர்வசு நட்சத்திரம் கடக லக்னத்தில் திரு ராமபிரான் அவதரித்தர். மறுநாள் பூச நட்சத்திரதில் பரதரும், அதற்கு மறுநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் இலட்சுமணனும்,சத்ருக்கணும் பிறந்தனர்.தசரத மன்னனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. தன்னுடைய கருவூலத்தில் இருந்த பொன்னையும், பொருளையும், வஸ்திரங்களையும் அனைவர்க்கும் வரி வழங்கினார். அவர்களும் 4 வேதங்களை போல் வளர்த்தனர்.  5 வயதிற்கு மேல் வசிஷ்டரின் ஆசிரமத்தில் வளர்ந்து ஆயக்கலை 64 ம் கற்றனர்.
     12 வயது நிறைவடைந்த பொழுது சகலக்கலைகளிலும் வல்லவராகவும் நல்லவராகவும் சிறந்து விளங்கினார்.  காயத்ரி மந்திரத்துக்கு அதிபதிவும் அளவற்ற தவமும் செய்த விசுவாமித்திரர் தசரதனின் அரண்மனைக்கு எழுந்தருளினார்.  கடைகாவலன் மன்னனிடம் முனிவரின் வருகையை கூறியவுடன் அனைவரும் அவரை பணிவுடன் வாயிற்படி சென்று வரவேற்றனர்.பூக்கள்ளாலும் சந்தனத்தை கொண்டும் பணிவிடைகள் செய்தனர்.  தசரதா  வசிட்டரைக் குலகுருவாக கொண்ட உன் தவம் பெரியது. வசிஷ்ட முனிவரின் கருணை உனக்கிருப்பதால்  எல்லாக் காரியங்களும் சித்தியாகும். உன்னை போன்ற உத்தம அரசனைக் எங்கும் காண இயலாது.

     என்னைப்போன்ற முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் எதாவது துன்பம் என்றால் மலையில் வீற்றிருக்கும் முருகனிடம் அல்லது முப்பெரும் கடவுளிடம் முறையிடுவோம். அங்கெல்லாம் சென்று நிறைவேறாத குறைகளை அயோத்திக்கு வந்து தங்களிடம் வந்து தான் முறையிடுவோம்.  விசுவாமித்திரர் இவ்வாறு பேசியத்தைக் கேட்ட தசரதனின் முகமும் அகமும் மலர்ந்தது.அதனால் அவர் அடியேன் தங்களது அடிமை நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிடுங்கள் என்றார். 
     அதற்கு அவர் நானே சன்னியாசி. எனக்கு என்ன வேண்டும்?   எனக்கு விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை.   யாகம் மூன்று வகைப்படும்.
1. பகைவரை அழிப்பது அபிசரா ஹோமம்.
2.  தான் உய்யப் பயன் கருதி செய்வது புத்திர காமேஷ்டி அசுவமேத யாகம்.
3.  உலகம் உய்ய யாகம் செய்வது உத்தம யாகம்.

     வேந்தரே உலகம் உய்யப்பயன் கருதி நல்ல தருக்கள் நிறைந்த குளிர்ந்த கானகத்தில் யாகம் செய்தேன். ஆனால் அதனை தடுத்து நிறுத்த அரக்கர்கள் இடையூறு செய்கின்றனர். ஆகவே அதற்கு காவல்புரிய ஒருவனை அனுப்ப வேண்டும் என்றுகூறவும் மன்னன் உடனே சேனதிபதியை அனுப்பிக்கிறேன் என்றார்.

     உடனே விசுவாமித்திரர் மன்னனை பார்த்து உன்னை விட சிறந்தவன் இருக்கின்றான் அவனை அனுப்பு என்று கூறவும், தசரதனோ 10 ரதங்களை வென்றவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனனா சம்பரனை அழித்தவன். தோள் வலிமையும், வாள் வலியும் கொண்டவன்.என்னை விட சிறந்தவன் அயோத்தியில் யார் இருக்கின்றார் என்று கேட்டார்.

     உடனே விசுவாமித்திரரும் உன்னை விட கோடி மடங்கு உயர்ந்தவனான வேடவித்யான ராமர். மன்னவனே கருமை நிறமும் கருணை குணமும் கொண்ட ராமரை என்னுடன் அனுப்பு என்று கூறவும் தசரதனுக்கோ புண்ணில் வேல் பாய்ந்தது போல இருந்தது.. உடனே அவர்க்காலடியில் வீழ்ந்து கண்ணீர் விட்டு ராமன் சிறு பாலகன். போர் முகம் அறியாதவன். மையத்தில் வல்ல அரக்கர்களை  வெல்லும் திறம் அறியாதவன்.  அடியேன் வந்து அரக்கர்களை வென்று வேள்வியை முடித்து கொடுப்பேன் என்றார்.

தசரதனின் முற்பிறப்பும் அவருக்கு திருமால் அளித்த வரமும்



தசரதனின் முற்பிறப்பும் அவருக்கு திருமால்  அளித்த வரமும்

     சிறந்த நீர் வளமும் நிலமும்  குடிமக்களும் வாழ்ந்த நாடு கோசல நாடு.அதன் தலைநகரம் அயோத்தி என்பதாகும்.  அங்கே வாழும் மக்கள் யாருக்கும் தீங்கு செய்யாமலும் எல்லா நலன்களும் பெற்று இன்பதுடன் வாழ்ந்தனர்.

     அயோத்தி என்ற சொல்லுக்கு யுத்தமில்லாத ஊர் என்று பொருள். அந்த நகரை ஆண்ட ஆதித்தன் குலத்தில் அஜமாகராஜனுக்கும், இந்துமதிக்கும் பிறந்தவர் தான் தசரதன்.  பத்து ரதங்களை வென்றதால் தசரதன் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. அவருடைய ஆடசியில் தருமம், கருணை சிறந்து விளங்கியது. மக்களுக்கும் பகைவர்கள், கள்வர்கள், விலங்குகளின் துன்பம் இன்றி வாழ்ந்தனர்.

     இவர் கௌசலை, கைகேயி, சுமித்திரையை மணந்து  64000  ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னரும் குழந்தைப்பேறு இல்லாததால் மிகவும் வருந்தனார்.  மக்கள் என்ன தான் சிறப்புற வாழ்ந்தாலும் தன்னை வாழ்தினாலும் குழந்தை இல்லாதது அவருக்கு மிகப்பெரிய துன்பமாக இருந்தது.
     அதனால் தன்னுடைய அரசவையின் குலகுருவான வசிஸ்டரிடம் கூறலானார்.  பிரம்மபுத்திரரை குலகுருவாக கொண்ட எனக்கு மகப்பேரில்லை என்பது எனக்கு துன்பமளிக்கிறது.  என்னுடைய மனுகுலத்தில் பிறந்தவர்களுக்கு  இந்தமாதிரி நடந்ததே இல்லை. வானளவு வளர்ந்த மரம் அனைவருக்கும் நிழல் தந்தால் மட்டும் போதுமா? பழுக்கவில்லை என்றால் என்ன பயன் என்ன பயன் என்று கூறவும் வசிஸ்டர் சிறிது நேரம் சிந்தனை செய்த பின்னர் தன் கண்களை மூடி ஞானக்கண் திறந்து பார்த்தார். 

       திருமால் திருப்பாற்கடலில் துயிலும் போது ராவணனின் ஆதிக்கத்தால் துன்பமடைந்த பிரம்மன் முதலான தேவாதி தேவர்களும் அவரை சரன்னடைந்து தங்களது துன்பத்தை தெரிவித்தனர்.  திருமால் அவர்களை நோக்கி தேவர்களை நான் பூவுலகில் ராமனாக அவதரித்து ராவணனை வீழ்த்தி தங்களுடைய துன்பத்தை நீகுவேன்.

     நான் பூமியில் மனிதனாகவும், தேவர்களாகிய நீங்கள் வாநரங்களாகவும் பிறக்குமறு கட்டளையிட்டார்.  அவரின் கட்டளைப்படி இந்திரன் வாலியாகவும், சூரியன் சுக்கிரனாகவும் அக்கினித்தேவன் நீலநகவும், வாயுதேவன் அனுமன் ஆகவும் உபேந்திரன் அங்கதவனாகவும், பிரம்மன் ஜாம்பவனாகவும், திருமாலுடைய சக்கரம் பரதராகவும், சங்கு சத்ருக்கணகவும், ஆதிசேஷன் இலக்குமனகவும், திருமகள் சீதாதேவியாகவும் பிறக்குமாறு  கட்டளையிட்டார்.

     மேலும் தான் ஏற்கனவே, பூலோகத்தில் வாழ்ந்த ஒரு முனிவரின் மனைவி தன் கணவன் கூறுவதற்கு எதிர்மாறாக நடந்து வந்தாள். அதனால் அம்முனிவர் மிகவும் துன்பமடைந்த போது வழிபோக்கர் ஒருவர் நீ உன் மனதில் நினைப்பதை நீ எதிர்மாறாக கூறினால் அவள் அந்த வேலையை மாற்றி செய்வாள் என்று கூறவும் அவரும் சாதம் செய்யவேண்டாம் என்று கூறினால் சத்தம் செய்வாள், சுடிதண்ணீர் குளிக்க கூடாது என்று கூறினால் சுடுநீர் வைத்து தருவாள். அப்படியிருக்க ஒருநாள் அவர் தன்னுடைய முத்தோர்களுக்கு பிதுர் பூசை செய்து பிண்டத்தை நல்ல நீரில் போட்டு வேண்டும் என்று மறந்து மாற்றி கூறிவிட்டார்.  அவள் எதிர்மாறாக சுத்தமில்லாத நீரில் கொடியதால் அவருக்கு கோபம் வந்து இவ்வளவு நாள் நீ செய்தவற்றை பார்த்து பொறுமையாக இருந்தேன். இப்போது செய்த தவறை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது. நீ பேயாக மாறுவாய் என்று சாபமிட்டார்.

     அந்த பெண் பேய் தவம் செய்துகொண்டிருந்த தர்மங்கத்தார் என்ற முனிவரை பிடிக்கச்சென்ற போது அவர் தன் கமண்டலத்தில் உள்ள நீர் எடுத்து அந்த பெண்ணின் மேல் தொளிக்க சாபவிமோசனம் பெற்று இருவரும் வைகுண்டம் சென்ற போது திருமால் அவரின் பக்தியை பாராட்டி தர்மங்கதரே நீ பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பெயரில் பிறப்பாயாக நான் உனக்கு மகனாக பிறப்பேன்.  அம்மா கலகை நீ கேகேய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாக பிறந்து கைகேயி என்ற பெயரில்  பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பெருமையுடன் வாழ்வாய். சமயம் வரும்பொழுது கலகம் செய்து என்னை கானகம் செல்ல சொல்வாய் என்று கூறினார்.
இந்தக் காட்சிகளை ஞானக்கண்ணில் கண்டார் வசிஷ்ட முனிவர்.